யாரும் எந்த நேரத்திலும் அரசியலுக்கு வரலாம்..! விஜய் அரசியல் பயணம் குறித்து திருமாவளவன் கருத்து

Senthil Velan
வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (17:48 IST)
நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தொகுதி பங்கீடு குறித்து திமுக உடனான பேச்சுவார்த்தையில் விரைவில் விசிக பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். 

2019-ல் இருந்தே பெரிய 10 கட்சிகளுடன் இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக பயணித்து வருகிறது என்றும் உரிய முறைப்படி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சுமூகமான முறையில் இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.  பொதுமக்களிடம் திமுக தலைமையிலான கூட்டணியே நன்மதிப்பு பெற்றுள்ளது என கூறினார். 

ALSO READ: புதிய பைக் உடன் ஆசி பெற வந்த மாணவன்..! ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட பிரேமலதா அறிவுறுத்தல்..!
 
விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சி குறித்த கேள்விக்கு பதலளித்த திருமாவளவன், யாரும் எந்த நேரத்திலும் அரசியலுக்கு வரலாம் என்றும் அதுதான் ஜனநாயகம், அந்த வகையில் நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments