Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருமி நாசினி சுரங்கம் கிருமிகளை அழிக்குமா? – மருத்துவர்கள் குழு தகவல்!

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (09:34 IST)
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் வைக்கப்படும் கிருமி நாசினி சுரங்கத்தால் முழுவதுமாக கிருமிகளை அழிக்க  முடியாது என மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழத்தின் பல மாவட்டங்களில் முக்கிய இடங்களில் கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் இதற்குள் புகுந்து வெளியேறினால் அதில் தெளிக்கப்படும் கிருமி நாசினியால் வைரஸ் தொற்றுகள் அழியும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் மருத்துவர்கள் குழு இதுகுறித்த தகவல் ஒன்றை தமிழக அரசுக்கு அளித்துள்ளது. அதில் கிருமி நாசினி சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் சோடியம் ஹைட்ரோகுளோட் மிகவும் குறைவான அளவிலேயே பயன்படுத்தப்படுவதால் அது கிருமியை அழிக்காது. அதேசமயம் அதிகமாக பயன்படுத்தினால் தோல் எரிச்சல், கண் எரிச்சல் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மையாகிறது யமுனை நதி.. பதவியேற்கும் முன்னரே பணிகள் தொடக்கம்..!

ஒரு மணி நேரம் லிப்டில் சிக்கிய கடலூர் காங்கிரஸ் எம்பி.. தீயணைப்பு துறையினர் மீட்பு..

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உதவித்தொகை ரூ.2000.. அண்ணாமலை வாக்குறுதி

அமெரிக்காவில் திடீர் கனமழை.. வெள்ளத்தில் 9 பேர் பலி.. 39,000 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு..!

டெல்லி நில அதிர்வு குறித்து பதட்டம் வேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

அடுத்த கட்டுரையில்
Show comments