Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்: மேலும் சில மாவட்டங்களில் முழு முடக்கம்!

Webdunia
திங்கள், 22 ஜூன் 2020 (12:48 IST)
தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மேலும் சில மாவட்டங்களிலும் முழு முடக்கம் அமலுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பாதிப்புகள் அதிகமாக உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு இந்த மாவட்டங்களில் அமலில் உள்ளது.

இந்நிலையில் இதுதவிர வேலூர், மதுரை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களிலும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாய் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு ஜூன் 30 வரை அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments