Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அதிகார துஷ்பிரயோகம்’ : இறகுப்பந்து கழக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2016 (00:45 IST)
சங்க விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதால் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கியதாக தமிழ்நாடு இறகு பந்துகழக பொருளாளர் ராஜ் குமார் தெரிவித்தார்.
 

 
இதுதொடர்பாக சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ”அன்புமணியால் சங்கத்திற்குள் நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டது. செயற்குழு கூட்டத்தின் போது துப்பாக்கி ஏந்திய நபருடன் வந்து பேசினார்.
 
தனது அதிகாரத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக நிர்வாகிகள் சிலரை நீக்கினார். அவரிடம் ஒப்படைக்கப்பட்ட லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போயுள்ளன. பல விசயங்களில் சங்க விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டார். அவர் தலைவராக நீடித்தால் சங்கத்திற்குள் வெளிப்படைத்தன்மை இருக்காது என சங்க நிர்வாகிகள் புகார் கூறினர்.
 
இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்க நிர்வாகிகளின் அதிகாரங்களை பயன்படுத்தி அவர் நீக்கப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியல் என்பது குடும்பங்களை மையமாக கொண்டு இயங்குகிறது: கார்த்தி சிதம்பரம்..!

அருணாச்சல பிரதேசத்தில் யாரும் செல்லாத மலைச்சிகரம்: தலாய் லாமா பெயர் வைக்க சீனா எதிர்ப்பு..

குற்றமே செய்யாத இரு இளைஞர்கள் சிறையில் ஒரு ஆண்டு: நிவாரணமாக வெறும் 500 ரூபாய்..!

என்னை தாங்கிப்பிடித்துள்ள தாயுமானவர்.. முதல்வருக்கு நன்றி சொன்ன செந்தில் பாலாஜி..!

துணை முதல்வர் உதயநிதி: பதவியேற்பு விழாவிற்கு வராத பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments