மத்திய அரசு அனுமதித்தால் மாணவர்களுக்கு தடுப்பூசி! – அன்பில் மகேஷ் தகவல்!

Webdunia
ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (09:17 IST)
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு அறிவுறுத்தினால் மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்புகள் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டும் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் “தமிழக முதலமைச்சர் எடுக்கும் முடிவுகளின்படி பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு, உலக சுகாதார மையமும் அறிவுறுத்தினால் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments