Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.

Webdunia
ஞாயிறு, 20 ஜனவரி 2019 (20:14 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்கவுள்ள அரசியல் கட்சிகளிடம் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் குழு ஒன்றை அமைத்துள்ளார்.

இந்த குழுவின் தலைவராக திமுக பொருளாளர் துரைமுருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் திமுக பிரமுகர்களான பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் எட்டு பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் கனிமொழி, டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், துரைசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், ராமசாமி ஆகியோர் உள்ளனர். இந்த தகவலை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments