Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக கவர்னராக முன்னாள் குஜராத் பெண் முதல்வரா? மத்திய அரசின் புதிய திட்டம்

Webdunia
புதன், 1 மார்ச் 2017 (05:42 IST)
தமிழக கவர்னர் ரோசய்யா பதவிக்காலம் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் மகாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் பொறுப்பு கவர்னராக செயல்பட்டு வருகிறார். தமிழகத்திற்கு என தனி கவர்னர் தேவை என ஆளுங்கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது புதிய தமிழக கவர்னர் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.




தமிழகத்தின் புதிய கவர்னராக முன்னாள் குஜராத் முதல்வர் ஆனந்தி பென் பட்டேல் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி தற்போது ஓரளவு சீரடைந்துள்ளதாலும், மகாராஷ்ரா ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ் அவர்களுக்கு பணிச் சூழல் அதிகம் இருப்பதாலும் விரைவில் புதிய கவர்னர் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய ஆனந்தி பென் பட்டேல், நரேந்திர மோடி பிரதமர் ஆனதை அடுத்து குஜராத் முதல்வரக கடந்த 2014-ம் ஆண்டு பதவியெற்றார். பின்னர் அவர் 2016-ம் ஆண்டு பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லோன் பணம் ரத்து, இழப்பீடு ரூ2 லட்சம்! பண மோசடியில் அலட்சியம் காட்டிய வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் நல்ல நேரம்! - பிரான்சில் பிரதமர் மோடி!

நவஜீவன், திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழித்தடங்கள் மாற்றம்: என்ன காரணம்?

இருவருக்கும் ஒரே கணவன்.. பேஸ்புக் தோழியின் மூலம் உண்மை அறிந்த இளம் பெண்..!

புனேவில் வேகமாக பரவும் ஜிபிஎஸ் நோய்.. பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments