Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கோடிக்கு செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்: சேலத்தில் சபீர் என்பவர் கைது..!

Siva
வெள்ளி, 24 மே 2024 (11:19 IST)
சேலத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். 
 
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செல்லாத என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருந்த சபீர் என்பவரை சேலம் அம்மாப்பேட்டை போலீசார் கைது செய்த  நிலையில் கைது செய்யப்பட்ட சபீரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செல்லாத நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.
 
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி மத்திய அரசு திடீரென 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் பின்னர் புதிய 500 ரூபாய் நோட்டு மற்றும் 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வந்தது என்பதும், அதில் 2000 ரூபாய் நோட்டும் சமீபத்தில் திரும்ப பெறப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500 ரூ.1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தால் சட்டப்படி குற்றம் என அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த பணத்தை சபீர் என்பவர் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வைத்திருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments