Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா: உற்சாக வரவேற்பு!

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (07:49 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேசிய கட்சியின் தலைவர்களான அமித்ஷா ராகுல் காந்தி உள்பட பலர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர் 
 
அந்த வகையில் சமீபத்தில் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ள நிலையில் தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தமிழகத்துக்கு வந்துள்ளார். விழுப்புரம் மற்றும் புதுவை நகரங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக டெல்லியிலிருந்து இன்று அதிகாலை கிளம்பிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சற்றுமுன் சென்னை வந்தடைந்தார் 
 
விழுப்புரம் புதுவையில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார் என்றும் அது மட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
சென்னை வந்துள்ள அமிர்ஷா சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு விமானம் மூலம் புதுவை செல்கிறார் என்றும் அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து விழுப்புரம் செல்கிறார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இன்று இரவு அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments