Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவிரி விவகாரம்: 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அனைத்து கட்சி கூட்டம்

காவிரி விவகாரம்: 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அனைத்து கட்சி கூட்டம்
, வியாழன், 22 பிப்ரவரி 2018 (10:19 IST)
காவிரி விவகாரம் குறித்து கடந்த 2002ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், கடந்த 2007ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோதும் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பின்னர் காவிரி விவகாரத்தில் அடுத்து செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர். ஆளுங்கட்சி சார்பில் முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வர்.

இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள கி.வீரமணி திராவிடர் கழகம், எல்.கே.சுதீஷ் தேமுதிக உள்பட பல தலைவர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இந்த கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடைபெறும் என்றும், கூட்டம் முடிந்ததும் முதல்வர், துணை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்திப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏர்செல் வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது என்ன? வாட்ஸ் அப்பில் பரவி வரும் செய்தி