Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் அலங்காநல்லூர்: ஏற்பாடுகளை தீவிரப்படுத்தும் ஆட்சியர்!

ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் அலங்காநல்லூர்: ஏற்பாடுகளை தீவிரப்படுத்தும் ஆட்சியர்!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2017 (13:33 IST)
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என அலங்காநல்லூரில் வெடித்த போராட்டத் தீ இன்று தமிழகம் முழுவதும் பற்றி எரிகிறது. இதன் காரணமாக தற்போது அடிபணிந்துள்ளது தமிழக அரசு.


 
 
தொடர் போராட்டத்தால் செய்வதறியாமல் திகைத்த அரசு தற்போது அவசர சட்டம் கொண்டு வர முடிவெடுத்துள்ளது. இதற்கான சட்ட வாரைவு தயார் செய்யப்பட்டு குடியரசுத்தலைவர், பிரதமரின் ஒப்புதல் பெறப்பட்டு ஓரிரு நாட்களில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என முதல்வர் இன்று அறிவித்தார்.
 
இதனையடுத்து ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடுகளை செய்ய அரசு தரப்பில் இருந்து உத்தரவு வந்ததாக தகவல்கள் வருகின்றன.
 
இதனையடுத்து அலங்காநல்லூரில் மதுரை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார்.  அரசின் உத்தரவின் பேரில் ஏற்பாடுகளை பார்வையிட்டதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தகவல் தெரிவித்தார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments