Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக முன்னாள் கவுன்சிலர் குடும்பத்திற்கு கொலை மிரட்டல்: அஜித் ரசிகர்கள் 9 பேர் கைது

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (10:30 IST)
தேனியில் சுவரொட்டி அவமதிக்கப்பட்டதால் அதிமுக முன்னாள் கவுன்சிலர் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர் அஜித் ரசிகர்கள் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி பாரஸ்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி வயது 49. இவர் அதிமுக முன்னாள் நகராட்சி கவுன்சிலர். அதே பகுதியில் நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் அவருடைய புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். சம்பவத்தன்று இந்த சுவரொட்டி மீது யாரோ சாணம் வீசி அவமதித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரசிகர்கள் சிலர் ஜெயமணி வீட்டுக்கு சென்று சுவரொட்டியை அவமதித்தது யார் என்று கேட்டு அவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த ஜெயமணியின் தாயார் மற்றும் மனைவியிடமும் அவர்கள் வாக்குவாதம் செய்து தகாத வார்த்தைகளால் பேசி , கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தேனி போலீஸ் ஸ்டேஷனில் ஜெயமணி புகார் அளித்தார். அதன்பேரில் அஜித்குமார் ரசிகர்களான ரோடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (27), பாலமுருகன் (23) அஜித்குமார் (20), செல்வகுமார் (26), விஜய் (22), ரகுநாதன்(21),  முத்துசரவணன்(22), செந்தில்குமார் (20), ஆகிய 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதில் விக்னேஷ் தவிர மற்ற ஒன்பது பேரையும் போலீசார் கைது செய்தனர் விக்னேஷை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

மலேசிய தமிழருக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை.. கடைசி நேரத்தில் திடீர் நிறுத்தம்..!

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments