Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தலில் ஜெயிக்க அதிமுக ’மாஸ்டர் பிளான் ’

Webdunia
திங்கள், 22 ஏப்ரல் 2019 (17:45 IST)
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்  இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 29 ஆம் தேதி முடிகிறது.

இந்நிலையில் இத்தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அமமுக ஆகியக் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தற்போது, 4  தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு அதிமுக தலைமை தேர்தல் பணிக்குழுவை நியமனம் செய்துள்ளது.
 
இந்நிலையில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு 17 மற்றும் 11 அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்தல் களப்பணியாற்ற வேண்டுமென அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
 
அரவக்குறிச்சிக்கு 14 அதிமுக மாவட்டப்பொறுப்பாளர்கள் தேர்தல் பணியாற்ற நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சூலூர் தொகுதிக்கு அதிமுகவின்  13 மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்தல் பணியாற்றுவார்கள் என்றும் தலைமை தெரிவித்துள்ளது.
 
4 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு அதிமுக தேர்தல் பணிக்குழு நியமனம் செய்துள்ளதை எதிர்க்கட்சிகள் கூர்ந்து கவனிக்கத்துவருவதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் 10 முதல் தொடர் விடுமுறை.. சென்னையில் இருந்து 1680 சிறப்பு பேருந்துகள்..!

இன்றைய பங்குச்சந்தை ரணகளமாகுமா? சீனாவுக்கு 104% வரிவிதித்த டிரம்ப்..!

நீட் தேர்வுக்காக இன்று அனைத்து கட்சி கூட்டம்.. அதிமுக எடுத்த அதிரடி முடிவு..!

போய் வாருங்கள் அப்பா.. தந்தை குமரி அனந்தன் மறைவு குறித்து தமிழிசை உருக்கமான பதிவு..!

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

அடுத்த கட்டுரையில்
Show comments