Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இரட்டை இலை சின்னத்துக்கு தொடங்கியது போர்!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (12:03 IST)
ஓபிஎஸ் அணி எடப்பாடி அணியுடன் இணைந்த பின்னும் இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் தினகரனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


 

 
நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கலந்துக் கொள்ளவில்லை என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து இரட்டை சின்னத்தை மீட்பது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் சென்று பிரமாணப் பத்திரங்களை வாபஸ் பெற நேற்று டெல்லி சென்றனர்.
 
சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் இன்று காலை தேர்தல் ஆணையரை சந்திக்க அனுமதி கோரியிருந்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் தினகரன் அணி ஆதரவாளர்கள் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து மனு கொடுத்தனர்.
 
அதில், கட்சியின் சின்னம், பொதுச்செயலாளர் பதவி போன்ற விவரங்களில் தங்களை கேட்காமல் முடிவு எடுக்க கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments