Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடுமலை படுகொலை: சிகிச்சைக்கு பின் கணவர் வீட்டிற்கு சென்ற கௌசல்யா

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2016 (11:33 IST)
காதலித்து ஜாதி மறுப்பு திருமணம் செய்த என்ஜினீயரிங் மாணவர் சங்கர் உடுமலையில் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். சங்கரின் மனைவி கவுசல்யாவும் வெட்டப்பட்டு படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
 

 


இந்நிலையில், சங்கரின் தந்தை வேலுசாமி, தம்பி விக்னேஷ் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனைக்கு கவுசல்யாவை பார்க்க வந்தனர்.அப்போது கவுசல்யா தனது மாமனார் வேலுசாமியிடம் "நான் சிகிச்சை முடிந்ததும் நேராக உங்கள் வீட்டுக்கு வந்து விடுவேன்.நான் தொடர்ந்து படித்து வேலைக்கு சென்று உங்களை நன்றாக பார்த்துக் கொள்வேன். என்னை மருமகளாக நினைக்க வேண்டாம். உங்களுக்கு மகளாக இருந்து நன்றாக கவனித்துக் கொள்கிறேன்." என்று கண்ணீர் மல்க கூறினார். இதைக் கேட்டு நெகிழ்ச்சியடைந்த வேலுசாமி, கவுசல்யாவிற்கு ஆறுதல் கூறினார். பின்னர், சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வருமாறு கூறினார்.

இந்நிலையில் 16 நாள் மருத்துவ சிகிச்சைக்கு பின் குணம் அடைந்த கௌசல்யா தனது கணவர் வீட்டுக்கு செல்ல விரும்புவதாக காவல்துறை அதிகாரிகளிடம் கூறினார். இதையடுத்து சங்கரின் தம்பியும், கவுசல்யாவின் மைத்துனருமான விக்னேஷ்வரன்(20) மருத்துவமனையிலிருந்து கௌசல்யாவை அழைத்துச்சென்றார்.

கள்ளக்காதலை கணவர் ஏற்கவில்லை.. மனவிரக்தியில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் தற்கொலை..!

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பதினான்கு பேர், தங்கம் மற்றும் வெள்ளி,பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

சிறிய அளவு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை: தவறி கீழே விழுந்த குடையால் பரபரப்பு..!

நான் மனிதன் அல்ல! பரமாத்மாவால் பூமிக்கு அனுப்பப்பட்டேன்! – பிரதமர் மோடி!

Show comments