Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை ஆனதும் முதல்வேலையாக மகள் திருமணம்: நளினி கடிதம்

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (08:14 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் 7 பேர் விடுதலை தற்போது கவர்னரின் கையில் உள்ளது. தமிழக அமைச்சரவை அனுப்பிய 7 பேர் விடுதலை குறித்த தீர்மானத்தில் இன்னும் கவர்னர் முடிவெடுக்காமல் உள்ளார்.

இந்த நிலையில் 7 பேர்களில் ஒருவராகிய நளினி ஊடகம் ஒன்றுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் விரைவில் தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என நம்புவதாகவும், 7 பேர் விடுதலை விவகாரத்தில், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு, நன்றி என்றும் கூறியுள்ளார்.

மேலும் விடுதலைக்கு பின் முதல் வேலையாக தனது மகளுக்கு லண்டனில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக நளினி நம்பிக்கையுடன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் , தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில், அதிமுக நிர்வாகிகள் 3 பேர் விடுதலைக்கு தான் வரவேற்பு தெரிவித்துள்ளதாகவும் நளினி தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குறைவான ஏடிஎம் மையங்கள்? பெருநகர் வளர்ச்சி குழுமம் விளக்கம்!

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments