Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் வக்கீல் ஓட ஓட வெட்டி கொலை : பட்டப்பகலில் பயங்கரம்

Webdunia
வியாழன், 16 ஜூன் 2016 (16:19 IST)
சென்னையில் வக்கீல் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
புழல் காவாங்கரை பகுதியில் வசிப்பவர் அகில்நாத் (34). இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
 
இன்று மாலை, அகில்நாத் அவரது வீட்டிற்கு அருகே உள்ள மைதானத்தில், அவரது நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மூன்று மோட்டார் சைக்கிளில் 6 பேர், அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். அவர்கள் அகில்நாத்தை சுற்றி வளைத்தனர். இதைக் கண்ட அவரது நண்பர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். 
 
அகில்நாத் அவர்களிடமிருந்து தப்பிக்க நினைத்து ஓடினார். ஆனால், அவரை விரட்டிய அந்த கும்பல், அவரை கால், தலை, கழுத்து ஆகிய பகுதிகளில் வெட்டினர். இதனால், அகில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்
 
அதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலையை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிரச்சியைடந்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  
 
கடந்த ஜனவர் 7ம் தேதி சிவாராஜ் என்கிற ரவுடி கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் அகில்நாத் 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். எனவே பழிக்கு பழி வாங்க, சிவராஜின் மைத்துனர் சந்துரு தலைமையில் வந்த கும்பல் அகில்நாத்தை வெட்டி சாய்த்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ள்து.
 
இந்த கொலை சம்பவம் காரணமாக, அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments