Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றுசேர வேண்டும்: சுப்பிரமணியம் சுவாமி

Webdunia
வியாழன், 15 பிப்ரவரி 2018 (09:46 IST)
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இருந்தே சசிகலா தலைமையிலான அணிக்கே ஆதரவு கொடுத்து வரும் பாஜக பிரமுகர் சுப்பிரமணியம் சுவாமி, தற்போது சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றுசேர வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த சுவாமி, 'திமுக ஒரு தேச விரோத, இந்து விரோத கட்சி என்றும், நாட்டை பிரிப்பதற்காக முயற்சி எடுத்த கட்சி என்றும் கூறியுள்ளார். அதிமுக பிளவுபட்டிருந்தால் திமுக ஆட்சிக்கு வந்துவிடும். எனவே அதிமுக ஒன்றிணைந்து திமுகவை ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும். ஆனால் அதிமுகவுக்கு தலைமை சசிகலாதான் இருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் பதவியில் இருந்து இறக்குவதே தனது முதல் பணி என்று டிடிவி தினகரன் கூறி வரும் நிலையில், சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து நடைமுறைக்கு சாத்தியமாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments