Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் வெளிநடப்பு : சட்டசபையில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (13:40 IST)
மாட்டிறைச்சி தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த கருத்தில் திருப்தி இல்லாததால் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூவர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இன்று சட்டசபை கூடிய போது, மத்திய அரசு கொண்டு வந்த கால்நடை சந்தை கட்டுப்பாட்டிற்கு எதிராக, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். மேலும், மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
 
அதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி, பெரும்பான்மையான மக்களின் விருப்பப்பட்டி தமிழக அரசு முடிவெடுக்கும். உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பின் தமிழக அரசின் நிலைப்பாடு என்னவென்று தெரிவிக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.
 
இதையடுத்து, முதல்வரின் இந்த பதிலை ஏற்காத திமுக உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும், அதிமுகவின் ஆதரவு எம்.எல்.ஏக்களான கருணாஸ், தமிமூன் அன்சாரி, தனியரசு ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments