Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமூல் கேட்டு தாக்கிய அதிமுக பிரமுகர்! – புகார் அளித்த கடைக்காரர்!

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (15:41 IST)
சென்னையில் அடகுக்கடை ஒன்றில் மாமூல் கேட்டு அதன் உரிமையாளரை அதிமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள லைட்ஸ் காலணியை சேர்ந்தவர் ஐஸ் ஹவுஸ் மூர்த்தி. அதிமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ள இவர் அங்குள்ள கடைகளில் அடிக்கடி மாமூல் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது. இப்படியாக டாக்டர் பெசண்ட் சாலையில் உள்ள அடகுக்கடை ஒன்றில் மூர்த்தி மாமுல் கேட்டுள்ளார்.

மூர்த்தி 500 ரூபாய் மாமூல் கேட்ட நிலையில் கடை உரிமையாளர் சுத்ராராம் 200 ரூபாய் மட்டுமே தந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி கடை உரிமையாளரை தாக்கியுள்ளார். இதுகுறித்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு சுத்ராராம் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments