நேர்காணல் ஒரே கட்டம்.. வேட்பாளர் அறிவிப்பு ரெண்டு கட்டம்!? – அடுத்த கட்டத்திற்கு நகரும் அதிமுக!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (10:47 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பாளர் நேர்காணல் நடத்திய அதிமுக வேட்பாளர் பட்டியலை தயார் செய்து வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக விருப்ப மனு அளிக்க கடைசி தேதி மார்ச் 5 என அறிவித்திருந்த நிலையில் அதை மார்ச் 3 ஆக குறைத்தது. இந்நிலையில் நேற்று விருப்ப மனு அளித்த அனைத்து உறுப்பினர்களிடமும் ஒரே நாளில் நேர்காணலை நடத்தி முடித்துள்ளது அதிமுக.

தேர்தலுக்கு ஒரு மாத காலமே உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் மாவட்ட வாரியாக வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக ஆட்சிமன்ற குழு ஆலோசனை நடத்தி வருகிறது. அதை தொடர்ந்து 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் பட்டியல் இரண்டு கட்டமாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏலியன்கள் இருப்பது உண்மை!.. அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா பேட்டி!..

பாஜக எம்.எல்.ஏவுக்கு ஜாமின் மறுத்த உச்சநீதிமன்றம்.. கைது செய்ய விமான நிலையத்தில் காத்திருக்கும் காவல்துறை..!

விஜயகாந்தை விட விஜய் திமுகவை அதிகம் காலி பண்ணுவார்!.. டிடிவி தினகரன் ஓப்பன்...

கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்த ஜியோ.. என்ன காரணம்?

ரகசியமாக சிறையில் இருந்து வெளியே வந்தாரா இம்ரான்கான்? வெளிநாடு செல்ல திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments