Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திராவிட மாடலை உருவாக்கியதே அதிமுக தான்: சிவகாசி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (13:02 IST)
தற்போது திராவிட மாடல் ஆட்சி என்று திமுக கூறிக் கொண்டிருக்கின்றது என்றும் ஆனால் திராவிட ஆட்சியை உருவாக்கியது அதிமுக தான் என்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார் 
 
திராவிட மாடல் திராவிட மாடல் என மூச்சுக்கு முன்னூறு முறை முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார் என்றும் அப்படி என்ன திராவிட மாடல் ஆட்சி செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கியதே அதிமுக தான் என்றும் அவர் கூறியுள்ளார்
 
பெண்கள் பேருந்தில் பயணம் செய்வதை ஓசிப்பயணம் என அமைச்சர் பொன்முடி நக்கல் செய்தது கண்டிக்கத்தக்கது என்றும் அது உங்கள் பணம் அல்ல என்றும் மக்கள் பணம் எல்லாம் என்றும் இதற்கெல்லாம் சேர்த்து தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார் 
 
தமிழகத்தில் 32 ஆண்டுகால அதிமுக ஆட்சி செய்துள்ளது என்றும் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் என சொல்வதற்கு அடித்தளமிட்டது அதிமுக தான் என்றும் அவர் மேலும் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments