Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரிடம் கஜா நிவாரண நிதி கொடுத்த துணை முதல்வர்

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (20:27 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அதிமுக சார்பில் கஜா பொது நிவாரண நிதியாக ரூ.1 கோடியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கொடுத்தார்.

டெல்டா பகுதியை கடுமையாக தாக்கி சேதம்  விளைவித்த கஜா புயலால் அப்பகுதி மக்கள் வாழ்வாதாரங்களை தொலைத்துவிட்டு கடும் வேதனையில் உள்ளனர். இந்த நிலையில் டெல்டா பகுதி மக்களின் துயர் துடைக்க பல்வேறு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், திரையுலக பிரபலங்கள் கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் நிதியுதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக சார்பாக கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடியை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கினார்.

மேலும் இன்று ஒரே நாளில் கஜா புயல் நிவாரணத்திற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் 10 கோடியே 68 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மொத்தம் இதுவரை 33 கோடியே 66 லட்சத்து 80 ஆயிரத்து 583 ரூபாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments