அதிமுக சின்னம், கொடியைப் பயன்படுத்த தடை கோரிய வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (16:45 IST)
அதிமுக சின்னம், கொடியைப் பயன்படுத்த ஓ. பன்னீர்செல்வம் தரப்பினருக்குத் தடை கோரி எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்த வழக்கு தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் இதுவரை பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை என  எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் அதிமுக கட்சியிலிருந்து ஓ பன்னீர்செல்வத்தை  நீக்கிய தீர்மானம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்ததால் இந்த வழக்கை நீதிபதி 
நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 
மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்பு மனுவுக்கு அக்டோபர் 6-ம் தேதிக்குள்  ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக பொது குழு இன்று கூடுகிறது.. ஓபிஎஸ்சை இணைக்க ஈபிஎஸ் சம்மதமா?

புதுவையில் விஜய் - என்ஆர் காங்கிரஸ் கூட்டணியா? உள்துறை அமைச்சர் சந்தேகம்..!

தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்? தமிழக அரசியலில் பரபரப்பு..!

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments