Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. குணமடைய வடபழனியில் அங்க பிரதட்சனம் : மேற்பார்வை செய்த கோகுல இந்திரா

ஜெ. குணமடைய வடபழனியில் அங்க பிரதட்சனம் : மேற்பார்வை செய்த கோகுல இந்திரா

Webdunia
புதன், 5 அக்டோபர் 2016 (18:37 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைய, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள், சென்னை வடபழனி கோவிலில் அங்கப்பிரதட்சனம் செய்து வழிபட்டனர்.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 14 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.  
 
அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் பிரார்த்தனைகளும், பூஜைகளும் செய்து வருகின்றனர். சிறியவர், பெரியவர் பார்க்காமல் அலகு குத்திக் கொண்டனர். கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், அன்னதானம், மண் சோறு சாப்பிடுதல், பாலபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், சென்னை வடபழனி முருகன் கோவிலில், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில் 50 பெண்கள் இன்று அங்கப் பிரதட்சனம் செய்து வழிபட்டனர். முதல்வர் விரைவில் நலம் பெறுவார் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments