அதிமுக மதுரை மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு? ஈபிஎஸ் ஆலோசனை..!

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2023 (17:45 IST)
மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுகவின் மாநாடு நடைபெற உள்ள நிலையில் இந்த மாநாட்டிற்கு பிரதமர் மோடியை அழைக்க எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.  
 
எடப்பாடி பழனிச்சாமிக்கு தென் மாவட்டங்களில் செல்வாக்கு இல்லை என்று கூறப்படும் நிலையில் அதை பொய்ப்பிக்கும் வகையில் தான் மதுரையில் மாநாடு நடத்தப்படுகிறது. 
 
அதிமுக பொதுச்செயலாளர் பதவியேற்ற பின் தென் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் பிரமாண்டமான மாநாடு நடைபெற உள்ளது. 
இந்த நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடியை அழைக்கலாமா என்று ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் அதிமுக நிர்வாகிகள் இது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.  
 
முழுக்க முழுக்க அதிமுகவினர் நடத்தும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments