Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிட்ட அதிமுகவினர்

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2015 (22:58 IST)
தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
சென்னை மாவட்ட அதிமுக பகுதி நிர்வாகிகள் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா  வெளியிட்டார்.
 
இதில், பெரம்பூர் பகுதி செயலாளர் லட்சுமி நாராயணனுக்கு பதிலாக, ரமேஷ் நியமிக்கப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், லட்சுமி நாராயணனை மீண்டும் அதே பதவியில் நியமிக்கக் கோரியும் அதிமுகவினர், அமைச்சர் பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிட்டனர்.
 
பாதுகாப்புக்கு அதிக அளவில் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments