Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக எம்.எல்.ஏ என்னை தாக்கினார்: இளம்பெண் புகார்

அதிமுக எம்.எல்.ஏ என்னை தாக்கினார்: இளம்பெண் புகார்

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2016 (16:21 IST)
அவினாசி எம்.எல்.ஏ.  கருப்பசாமி தன்னை தாக்கியதாக அவினாசி ஆலந்தூர் சத்யா நகரை சேர்ந்த சித்ரா என்ற 35 வயது பெண் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.


 
 
அவினாசி எம்.எல்.ஏ. கருப்பசாமி தன்னை தாக்கியதாக கூறி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்த சித்ரா, காவல் துறையிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில், எங்கள் வீட்டு விஷேசத்திற்காக வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி முருகம்மாள் ஆகியோரை அவினாசி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கருப்பசாமி தகாத வார்த்தையில் பேசியும், அவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
 
நடந்தவற்றை உறவினர்கள் எனது வீட்டுக்கு வந்து கூறினர். அதிர்ச்சியடைந்த நான் இது குறித்து எம்.எல்.ஏ-விடம் கேட்டேன். அப்போது எம்.எல்.ஏ. கருப்பசாமி என்னையும் தாக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார் சித்ரா.
 
இந்த புகார் குறித்து கருத்து தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏ கருப்பசாமி இதனை மறுத்துள்ளார். எனக்கு வேண்டாத சிலரின் தூண்டுதலாலும் பணம் பறிக்கவும் திட்டமிட்டு நாடகமாடுகிறார்கள். தேர்தல் நேரத்தில் எனக்கு கெட்டபெயரை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். இதனை நம்பவேண்டாம் என கூறியுள்ளார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments