Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவுக்கு கார்ப்பரேட் நிறுவனம் கொடுத்த ஐடியா!

Webdunia
புதன், 17 ஜூலை 2019 (08:25 IST)
தேர்தல் வியூகம் அமைக்க அரசியல் கட்சிகள். கார்ப்பரேட் நிறுவனங்களை அணுகுவது தற்போது ஒரு வழக்கமாக இருக்கிறது.   கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக ஆரம்பித்து வைத்த இந்த கார்ப்பரேட் கலாசாரத்தை அதன் பின்னர் மேற்குவங்கம், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களை அணுகி வருகின்றனர் 
 
அரசியல் வியூகம் அமைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பிரசாந்த் கிஷோரின் நிறுவனம்தான் இந்திய அளவில் முன்னணி நிறுவனம். இந்த நிறுவனம் ஒரே நேரத்தில் அதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய இரு கட்சிகளிடமும் பேசி வந்தது. ஆனால் மக்கள் நீதி மையம் கட்சிக்கு கிஷோர் நிறுவனம் உதவும் என கூறப்படுகிறது. இருப்பினும் பாஜக கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இந்த நிறுவனம் அதிமுகவுக்கு ஒருசில ஐடியாக்கள் கொடுக்க முன்வந்துள்ளது.
 
அதில் ஒன்று தான் அதிமுகவை ஒரே தலைமையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பது. அதுமட்டுமின்றி அதிமுகவுக்கு முக்குலத்தோர் வாக்குகள் குறைந்து விட்டது என்பதால் அதை ஈடுகட்ட மற்ற சமூகங்களை சேர்ந்த வாக்காளர்களை கவரும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும், பெண்களின் வாக்குகளை கவர சில அதிரடி அறிவிப்புகளை அறிவிக்க வேண்டும் என்றும் கிஷோர் தரப்பு அதிமுகவுக்கு ஐடியா கொடுத்துள்ளார்கள்
 
ஒரு நிறுவனம் ஒரே நேரத்தில் ஒரு மாநிலத்தில் இரண்டு கட்சிகளுக்கு ஆதரவாக வேலை செய்ய முடியாது என்பதால் அதிமுகவுக்கு ஐடியா மட்டும் கொடுத்துவிட்டு, கமல் கட்சிக்கு முழுவீச்சில் வேலை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடே கண்ணீரில் மூழ்கி இருக்க எடப்பாடி பழனிச்சாமி விருந்து வைப்பதா? மருது அழகுராஜ் கண்டனம்..!

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கப்படும்.. அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆவேசம்..!

மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர்: வேலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

மையோனைஸுக்கு ஓராண்டு தடை: தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை..!

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments