Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடி பௌர்ணமி, கிரிவலம், கள்ளழகர் திருவிழா! கலகலக்கும் கோவில்கள்!

Prasanth Karthick
ஞாயிறு, 21 ஜூலை 2024 (10:01 IST)

ஆடி மாதம் தொடங்கியுள்ள நிலையில் முதல் வாரமே திருவிழாக்களால் தமிழக கோவில்கள் கலகலத்து வருகிறது.

கடந்த வியாழக்கிழமை ஆடி மாதம் தொடங்கிய நிலையில், அம்மன் கோவில்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள் என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை அன்றே பிரபலமான அம்மன் கோவில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆடி பௌர்ணமி என்பதால் பல கோவில்களிலும் விசேஷங்களாக காணப்படுகின்றன. ஆடி ஞாயிற்றுக்கிழமைகளில் கூழும், மீனும் வார்ப்பது வழக்கம் என்பதால் இன்று காலையே சென்னை காசிமேடு மீன் சந்தையில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. 

ஆடி பௌர்ணமிக்கு திருவண்ணாமலையில் கிரிவலம் தொடங்கியுள்ள நிலையில் காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருவதால் கூட்டம் அதிகமாக உள்ளது. 

மதுரை கள்ளழகர் கோவிலில் ஆடி பெரும் திருவிழா நடந்து வரும் நிலையில் 9வது நாளான இன்று திருவிழாவின் உச்சமாக தேரோட்டம் கோலாகலமாக நடந்து வருகிறது. இதற்காக மதுரையில் மட்டுமல்லாமல் தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி என பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் குவிந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் ஆடி பௌர்ணமி காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல சிவன் கோவில்களிலும் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments