Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனருக்கு ஒரு தலைமை செயலாளர்: என்ன நடக்குது தமிழகத்தில்?

Webdunia
புதன், 29 நவம்பர் 2017 (10:16 IST)
தமிழகத்தில் ஏற்கனவே கிரிஜா வைத்தியநாதன் என்பவர் தலைமைச்செயலாளராக பதவி வகித்து வரும் நிலையில் ஆளுனருக்கு என தனியாக ஒரு தலைமை செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தமிழக கவர்னராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்ட பன்வாரிலால் புரோஹித் ஏற்கனவே அமைச்சர்கள் இல்லாமல் அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்யப்பட்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் இடையே எதிர்ப்புகள் கிளம்பியிருக்கும் நிலையில் தற்போது தமிழக ஆளுனருக்கு கூடுதல் செயலாளர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
 
ஐஏஎஸ் அதிகாரியான ராஜகோபால் என்பவர் இந்த பதவிக்கு நியமனம் செய்யபப்ட்டுள்ளதோடு, இவருக்கு தலைமை செயலாளருக்கு உள்ள சம அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இவர் ஆளுனருக்கான தலைமை செயலாளர் என்றே கூறப்படுகிறது.
 
கூடுதல் தலைமை செயலாளர் நியமனம் செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் விரைவில் ஜனாதிபதி ஆட்சி அமைவதற்கான அறிகுறியே என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments