Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தரத்தில் நிற்கும் அடுக்குமாடி குடியிருப்பு: அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (14:31 IST)
அந்தரத்தில் நிற்கும் அடுக்குமாடி குடியிருப்பு
வடகிழக்கு பருவமழை காரணமாகவும், நிவர் புயல் காரணமாகவும் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் கனமழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததால் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியில் 22 அடி நிரம்பிவிட்டது 
 
இதனை அடுத்து இன்று நண்பகல் 12 மணிக்கு வினாடிக்கு ஆயிரம் கனஅடி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு காரணமாக தற்போது அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு செல்கிறது 
 
இதன் காரணமாக கரையோரங்களில் இந்த சுற்றுப்புற குடியிருப்பு சுவர்கள் இடிந்து விழுந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் அடையாறு ஆற்றின் ஓரத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அந்தரத்தில்  நின்று கொண்டிருப்பதால் அந்த குடியிருப்பில் இருந்த பொது மக்களை உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் வெளியேற்றினர் எந்த நேரத்திலும் அந்த குடியிருப்பு இடிந்து விழுந்து ஆபத்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments