கரூரில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த தொண்டர்கள்

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (17:34 IST)
கரூர் மாநகர மத்திய தெற்கு பகுதி 32வது வார்டு பகுதியின் திமுக வை சேர்ந்த சங்கீதா மற்றும்  வெண்ணிலா ஆகியோர் திமுக வின் செயல்பாடுகள் பிடிக்காததால் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துகொண்டனர்.


கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகர மத்திய தெற்கு பகுதி 32வது வார்டு பகுதியின் திமுக வை சேர்ந்த சங்கீதா மற்றும்  வெண்ணிலா ஆகியோர் திமுக வின் செயல்பாடுகள் பிடிக்காததால் திமுகவில் இருந்து விலகி  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள்  முதலமைச்சரும், கழக பொதுச் செயலாளருமான திரு.எடப்பாடியார் அவர்களின் தலைமையை ஏற்று  முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் மற்றும்  கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் திரு.மா.சின்னசாமி அவர்களின் முன்னிலையில் தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டார். 
 
உடன் மாவட்ட துணை செயலாளர் மல்லிகா சுப்ராயன் கரூர் சட்டமன்ற தொகுதி பொதுகுழு உறுப்பினர் பசுவை சிவசாமி கரூர் மத்திய மாநகர தெற்கு பகுதி கழகச் செயலாளர் சேரன்.எம்.பழனிசாமி மற்றும் கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments