Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வை ரத்து : மாணவர்களின் குரலை என்றென்றும் எதிரொலிப்போம்.- அமைச்சர் உதயநிதி

Sinoj
சனி, 6 ஜனவரி 2024 (21:15 IST)
தமிழகத்தில்  முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில்,  கடந்த அக்டோபர் 21 அன்று தொடங்கி வைத்த நீட்விலக்கு நம் இலக்கு கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இணையம் மற்றும் அஞ்சல் அட்டைகள் வழியாக 80 லட்சத்துக்கும் அதிகமான தமிழ்நாட்டு மக்கள் கையெழுத்திட்டு வருவதாக அமைச்சர்   உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 
 
''நீட் அநீதிக்கு எதிரான ஜனநாயகப் போராக  ‘நீட் விலக்கு - நம் இலக்கு’ கையெழுத்து இயக்கத்தை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கினோம். 
 
இந்த கையெழுத்து இயக்கத்தில் https://banneet.in இணையம் மற்றும் அஞ்சல் அட்டைகள் வழியாக 80 லட்சத்துக்கும் அதிகமான தமிழ்நாட்டு மக்கள் கையெழுத்திட்டு வரும் நிலையில், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில் அஞ்சல் அட்டை வழியாக பெறப்பட்ட கையெழுத்துகளை இன்று பெற்றுக் கொண்டோம். 
 
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்கள் - மாணவர்களின் குரலை என்றென்றும் எதிரொலிப்போம்.''என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments