Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்துல் கலாம் மறைவு - அதிமுக நிகழ்ச்சிகள் ஒரு வாரம் ரத்து: ஜெயலலிதா அறிவிப்பு

Webdunia
புதன், 29 ஜூலை 2015 (01:40 IST)
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு காரணமாக, அதிமுக நிகழ்ச்சிகள் ஒரு வாரம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
உலகம் புகழும் வகையில், இந்தியாவின் 11ஆவது குடியரசு  தலைவராக பணியாற்றிய `பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் மரணமடைந்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.
 
தமிழ் அன்னையின் பெருமை மிகு புதல்வராக விளங்கிய டாக்டர் அப்துல் கலாம்-ன்  எளிமையான வாழ்வும், எல்லோரையும் நேசிக்கும்  பண்பும் உலகம் அறிந்த உயர்ந்த  குணங்கள் ஆகும்.
 
அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்கு  ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். 
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments