Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக நிர்வாகி எரித்துக் கொலை: அதிர்ச்சியில் ஆண்டிப்பட்டி

Webdunia
திங்கள், 22 ஜூலை 2019 (13:18 IST)
ஆண்டிப்பட்டியை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் மர்மமான முறையில் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். சொந்தமாக இரண்டு கார்களை வைத்து வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வருகிறார். மேலும் ஆண்டிபட்டி ஒன்றிய அதிமுக மாணவர் அணி துணை செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
நேற்று இரவு முழுவதும் சதீஷை காணவில்லை. இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சதீஷ் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடப்பதை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சதீஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments