Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக நிர்வாகி எரித்துக் கொலை: அதிர்ச்சியில் ஆண்டிப்பட்டி

Webdunia
திங்கள், 22 ஜூலை 2019 (13:18 IST)
ஆண்டிப்பட்டியை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் மர்மமான முறையில் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். சொந்தமாக இரண்டு கார்களை வைத்து வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வருகிறார். மேலும் ஆண்டிபட்டி ஒன்றிய அதிமுக மாணவர் அணி துணை செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
நேற்று இரவு முழுவதும் சதீஷை காணவில்லை. இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சதீஷ் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடப்பதை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சதீஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments