Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

Mahendran
வெள்ளி, 17 மே 2024 (14:18 IST)
ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளரால் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில், அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரின் முதல் தகவலை அறிக்கையில், ‘நான் கெஜ்ரிவாலை நான் சந்திக்க சென்ற போது அவரது உதவியாளர் பிபவ் குமார் ஏழெட்டு முறை என்னை சரமாரியாக அறைந்தார். என்னை விட்டு விடுமாறு கெஞ்சியும் நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் பிபவ் குமார் எட்டி உதைத்தார்.
 
என்னை உன்னால் எதுவும் செய்ய முடியாது. கொன்று புதைப்பேன் என பிபவ் குமார் மிரட்டினார். மாதவிடாய் என்பதால் தாங்க முடியாத வலியால் துடித்தேன். கெஞ்சியும் பிபவ் குமார் விடாமல் தாக்கினார்’ என்று கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் எனது விவகாரத்தை பாஜகவினர் அரசியலாக்க வேண்டாம் என ஸ்வாதி மாலிவால் கேட்டு கொண்ட நிலையிலும் ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை பெண் எம்பி மீது தாக்குதல் நடத்திய கட்சி நிர்வாகி மீது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என  மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments