Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட்டிக்கு பணம் கொடுக்கும் மஞ்சுளா ஓட ஓட வெட்டிக் கொலை

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (08:38 IST)
திண்டுக்கல்லில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த மஞ்சுளா ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை செய்து வந்தார்.
 
இந்நிலையில் ஊருக்கு சென்றுவிட்டு திரும்பிய மஞ்சுளாவை, ஒரு மர்ம கும்பல் வழிமறித்தது. நீங்கள் யார் என மஞ்சுளா கேட்டுக்கொண்டிருக்கும் போதே, அந்த கும்பல் பயங்கர ஆயுதங்களை எடுத்து மஞ்சுளாவை தாக்க ஆரம்பித்தனர். 
 
உயிருக்கு பயந்து மஞ்சுளா ஓடினார். அவரை விடாத கும்பல், மஞ்சுளாவை விரட்டி விரட்டி வெட்டி சாய்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் மஞ்சுளா சம்பவ இடத்திலே பலியானார்.
 
இதுகுறித்து வழக்குப்பதிந்துள்ள போலீஸார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments