Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 1350 கோடி வரி ஏய்ப்பு செய்த கிறிஸ்டி நிறுவனம் - 500 கோடி மதிப்புள்ள டெண்டர்கள் ரத்து

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (09:48 IST)
தமிழக அரசுக்கு  முட்டை, பருப்பு, சத்துமாவு உள்ளிட்ட அத்தியாவச பொருட்களை விநியோகிக்கும் கிறிஸ்டி நிறுவனம் 1350 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு உணவு பொருட்கள் வழங்கும் கிறிஸ்டி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த 5ம் தேதி தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான 76 இடங்களில் வருமான வரித்துறையின் சோதனையை தொடங்கினர். கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் வீடு, உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 45க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர். 
 
அதில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கிறிஸ்டி நிறுவனம் ரூ.245 கோடி டெபாசிட் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1350 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ள கிறிஸ்டி நிறுவனத்திடம் இருந்து 10 கிலோ தங்கம், ரூ.17 கோடி ரூபாய் பணம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சத்துணவு விநியோகத்திற்கு புதிய டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டரில் கிறிஸ்டி நிறுவனம் பங்குபெற்றது. இதனால் தேதி குறிப்படப்படாமல் டெண்டர் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments