Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏண்டா லேட்டா வந்த என்று கேட்டதால் 10 வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி

Webdunia
சனி, 14 ஜூலை 2018 (12:50 IST)
காஞ்சிபுரத்தில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவனை ஆசிரியர் திட்டியதால், மாணவன் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் என்பவர் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 15 வயதில் ஒரு மகன் உள்ளார். அவரது மகன் ரகு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
 
இந்நிலையில் நேற்று மாணவன் பள்ளிக்கு தாமதமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் வகுப்பாசிரியர் மாணவனை வகுப்பிற்கு வெளியே நிற்கும்படி கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன் பள்ளியின் மாடியிலிருந்து கீழே குதித்துள்ளான்.
 
உடனடியாக மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பயணிகள் அதிர்ச்சி..!

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments