Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ.ராசா, பொன்முடிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி! – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (10:29 IST)
திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் துணை பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக எதிர்பார்க்கப்பட்டபடியே துரைமுருகனுக்கு கட்சி பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் திமுக சட்டவிதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு 3 துணை பொதுச்செயலாளர்கள் என்ற எண்ணிக்கை 5 ஆக மாற்றப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஆ.ராசா மற்றும் பொன்முடி ஆகியோருக்கு திமுக துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே திமுக துணை பொதுச்செயலாளராக அந்தியூர் செல்வராஜ், ஐ.பெரியசாமி மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.

அடுத்த கட்டுரையில்
Show comments