Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: நமது அம்மா நாளிதழின் கவிதை

Webdunia
வியாழன், 14 ஜூன் 2018 (09:45 IST)
தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏக்களின் வழக்கின் தீர்ப்பு இன்று வெளிவரவுள்ளது. இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டாலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரகள் உடனே சுப்ரீம் கோர்ட் சென்றால் இதே நிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில் 18 எம்.எல்.ஏக்கள் குறித்து ஒரு கவிதை வெளிவந்துள்ளது. பதினென்கீழ்கணக்கு என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த கவிதையில், 'அதிமுகவில் இருந்து விலகி, வழிமாறிச் சென்று சேராத இடம் சேர்ந்து பதவியை இழந்து, மீண்டும் உயிர்வந்து வாழுமோ என விழி பிதுங்கி நிற்போரின் எண்ணிக்கை 18. பதவி தந்த இயக்கத்தை மறந்து, பாசத்தாய் கட்டம் கட்டி வெளியேற்றிய பாதகக் கூட்டத்தோடு சேர்ந்தால், சேதாரம் தானே! என்று கவிதை வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் 'சகுனியை சார்ந்தோம் அழிந்ததும், சாரதியாம் கண்ணனை சார்ந்தோர் வாழ்ந்ததும், அவனை நம்பிய அவல் குசேலனும், அதிகுபேரன் ஆனதும், குலம் பார்த்து கூடியதால் மட்டுமே' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் 'வாய்மையின் வழிநின்று வணங்கும் கைகளுக்கு மட்டும்தான் அதுவிலகுமுனே வரங்கள் வாய்க்கிறது' என்றும் அந்த கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கவிதையை அதிமுகவினர் ரசித்து படித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments