Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேவலம் சொத்துக்காக குடும்பமே சேர்ந்து தந்தையை கொலை செய்த அவலம்

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2019 (07:41 IST)
சென்னையில் கேவலம் சொத்துக்காக குடும்பமே சேர்ந்து தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசுக்கும், சொத்துக்கும் இருக்கும் மதிப்பு மனிதர்களுக்கு இல்லை. இந்த கொடுமையால் பல நேரங்களில் பல அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. சமீபத்தில் சொத்துக்காக பெண் ஒருவர் அவரது தந்தையை ரௌடிகளை ஏவி வீட்டிலிருந்து தூக்கி வெளியே வீசியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
சென்னை ஜேஜே நகரை சேர்ந்த ஜேசுராஜன். இவரது மனைவி கலா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சமீபத்தில் ஜேசுராஜன் கலாவின் தம்பி கோபாலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
 
போலீஸார் கோபாலிடம் விசாரித்ததில், ஜேசுராஜனின் சொத்துக்களை அபகரிக்க அவர் இப்படி செய்ததாக தெரியவந்தது. கோபாலின் பின்னணியில் யாரோ இருப்பதாக சந்தேகித்த போலீஸார் அவனிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் சொத்துக்காக தனது அக்கா கலா மற்றும் அவரது பிள்ளைகளுடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததாக கூறினான். 
 
இதையடுத்து போலீஸார் அனைவரையும் கைது செய்தனர். சொத்துக்காக அநியாயமாக குடும்பமே சேர்ந்து தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments