Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரக்கு குடுக்கலனா இறங்க மாட்டேன்! ரயில் பாலம் மேல் வடமாநில தொழிலாளி அலப்பறை!

Webdunia
புதன், 30 நவம்பர் 2022 (13:03 IST)
சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் மது கேட்டு வடமாநில தொழிலாளி காவலர்களிடம் அலப்பறை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் காலை வழக்கம்போல பலரும் அன்றாட வேலைகளுக்காக ரயில் ஏற சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது வடமாநில தொழிலாளி ஒருவர் ரயில் நடைபாலத்தில் ஏறி அதன் பக்கவாட்டு கம்பி க்ரில்லை தாண்டி சென்று கீழே விழுவது போல ஒரு இரும்பு ராடில் அமர்ந்து கொண்டார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ரயில்வே போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். அங்கு விரைந்த ரயில்வே போலீஸார் அந்த தொழிலாளியை சமரசம் செய்து மீட்க முயன்றனர். ஆனால் தனக்கு மதுபானம் வாங்கி தந்தால்தான் வருவேன் என அவர் அடம்பிடித்துள்ளார்.

இதனால் ஒரு மதுபாட்டிலை வாங்கி வந்து காட்டி அவரை சமாதானம் செய்து பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments