Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவக குடிநீர் டிரம்முக்குள் செத்த எலி...வாடிக்கையாளர் அதிர்ச்சி

Sinoj
சனி, 9 மார்ச் 2024 (17:54 IST)
தாம்பரம் அருகே சாஜ் என்ற உணவகத்தின் குடிநீர் டிரம்முக்குள் எலி செத்துக்கிடந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
 
சமீபகாலமாகவே ஓட்டல்களில் சுகாதாரமற்ற  முறையில் சமைப்பதாகவும், சுத்தமில்லாமல் சமையலறையைப் பயன்படுத்தி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
 
சுகாதாரமற்ற முறைகளில் ஓட்டல்களில் சமைக்கப்படுவதால், அதைச் சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு உடல்உபாதைகள் ஏற்படுகிறது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டிருப்பதை செய்திகளின் மூலம் அறிந்திருப்போம்.
 
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் தமிழகத்தில்  உள்ள ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 
 
இந்த  நிலையில், தாம்பரம் அருகே சாஜ் என்ற உணவகத்தின் குடிநீர் டிரம்முக்குள் எலி செத்துக்கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தனர்.
 
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  நிலையில், இந்த உணவகத்தில் சாப்பிட்ட வாடிக்கையாளர்கள் பணம் கொடுக்க வேண்டாம் என உரிமையாளர் கூறி, அவர்களிடம் மன்னிப்பு கேட்ட நிலையில், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments