Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடியில் சட்டமீறல்: தவெக விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Mahendran
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (10:39 IST)
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் சட்டத்துக்கு புறம்பான முறையில் கொடி ஏற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தனது நேற்று தனது தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து ஏற்றிய நிலையில் அந்த கொடி குறித்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கோடியில் தேர்தல் விதிமுறைகள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான சின்னங்கள் இருப்பதாக சென்னை சேர்ந்த ஆர்டிஐ செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கேரளா அரசு போக்குவரத்து சின்னமான யானை தமிழக வெற்றி கழகத்தின் சின்னமாக இருப்பதாகவும், ஸ்பெயின் நாட்டை அவமதிக்கும் வகையில் அந்நாட்டு தேசியக்கொடி போன்று அமைந்துள்ளதாகவும் அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து நடிகர் விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தனது புகார் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments