Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.. தேர்தல் முடிந்த பின் வழக்கு தொடருங்கள்..!

Mahendran
செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (12:16 IST)
திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை ஏற்றதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
 
மதுரையைச் சேர்ந்தவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்  வாக்குப்பதிவு தவிர மற்ற அனைத்து தேர்தல் நடைமுறைகளும் முடிந்த நிலையில் தாமதமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
 
மேலும் ஒருவேளை மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிந்த பின் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம் என உயர் நீதிமன்றம் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது. 
 
வேட்பு மனு முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை, தகவல்கள் மறைக்கப்பட்டதாக வழக்கு தொடர்ந்த நிலையில் நெல்லை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்கவும் மனுவில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. ஆனால் அந்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments