Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்டோரியா கவுரி நீதிபதியா? உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்கறிஞர்கள்!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (13:57 IST)
விக்டோரியா கவுரி நீதிபதியா? உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்கறிஞர்கள்!
விக்டோரியா கவுரி நீதிபதி ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பாஜக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் விக்டோரியா கௌரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆவதற்கு சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலைய்ல் விக்டோரியாக கவுரியை நீதிபதி ஆக்குவதற்கு மூத்த வழக்கறிஞர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய விக்டோரியா கவுரியை நீதிபதி ஆக்க கூடாது என்று அந்த மனுவில் கூறியுள்ளனர். 
 
இந்த வழக்கு வரும் பத்தாம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments