Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடன் பிரச்சனையால் தனியார் நிறுவன அதிபர் குடும்பத்துடன் தற்கொலை

Webdunia
ஞாயிறு, 1 ஜூலை 2018 (20:20 IST)
கோவையில் தனியார் நிறுவன அதிபர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வடவள்ளி மருதமலை சாலையில் உள்ள கல்வீரம் பாளையத்தை சேர்ந்தவர் பிரசன்னா (45). இவரது மனைவி பாக்கியலட்சுமி (40). இவர்களுக்கு விஷாலினி என்ற மகள் உள்ளார். பிரசன்னா குடிநீர் சுத்திகரிக்கும் கம்பெனியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.
 
பிரசன்னாவிற்கு தொழிலில் போதிய அனுபவம் இல்லாததால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் பிரசன்னா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மனமுடைந்த பிரசன்னா தனது மகளை தனது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு தனது மனைவியுடன் வி‌ஷம் குடித்துள்ளார். 
 
இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரசன்னா உயிரிழந்துவிட்டார். அவரது மனைவி பாக்கியலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடன் பிரச்சனையால் இப்படிப்பட்ட துயர சம்பவம் நடைபெற்றிருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments