Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் திடீர் பள்ளம்.. பேருந்து சிக்கியதால் பரபரப்பு..!

Siva
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (16:37 IST)
சென்னை மீனம்பாக்கத்தில் ஜிஎஸ்டி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் மாநகர பேருந்து சிக்கியதால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் திடீரென பள்ளம் ஏற்பட்டு அதில் வாகனங்கள் சிக்கிக் கொள்ளும் நிகழ்வு நடந்து கொண்டிருக்கின்றன.

மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக தான் இந்த பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் சற்றுமுன் சென்னை ஜிஎஸ்டி சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பள்ளத்தில் மீனம்பாக்கத்தில் இருந்து கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து சிக்கியதாகவும் இதனை அடுத்து பயணிகள் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

எப்போதும் பிசியாக இருக்கும் ஜிஎஸ்டி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நிலைமையை சரி செய்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments